search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "திருவண்ணாமலை மூக்குப்பொடி"

    திருவண்ணாமலையில் மூக்குப்பொடி சாமியாரின் தீவிர பக்தரான டி.டி.வி.தினகரன் சேஷாத்ரி ஆசிரமத்தில் தங்கியுள்ள மூக்குப்பொடி சாமியாரை நேற்று சந்தித்து ஆசிபெற்றார். #TTVDinakaran

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலையை சுற்றி வரும் மூக்குப்பொடி சாமியாருக்கு நிரந்தரமாக எந்த இடமும் கிடையாது. விரும்பிய இடத்தில் தங்கியிருப்பது இவரது வழக்கம். பஸ் நிலையம் அருகே உள்ள ஒரு ஓட்டலில் சில மாதங்கள் தங்கியிருந்தார்.

    அதைத் தொடர்ந்து அருணாசலேஸ்வரர் கோவில் எதிரில் உள்ள ஒரு டீக்கடையில் தங்கியிருந்தார். தற்போது கிரிவலப்பாதையில் உள்ள சேஷாத்ரி ஆஸ்ரமத்தில் தங்கியிருக்கிறார்.

    இவர் யாரிடமும் பேசுவதில்லை. பெரும்பாலும் மவுன நிலையிலேயே இருப்பார். கோபம் வந்தால் திட்டுவது இவரது வழக்கம். இவர் திட்டினாலும், கை உயர்த்தி காட்டினாலும் தங்களுக்கு நன்மை கிடைக்கும் என்பது பலரது நம்பிக்கையாக இருக்கிறது.

    இந்நிலையில் மூக்குப்பொடி சாமியாரின் தீவிர பக்தரான டி.டி.வி.தினகரன் சேஷாத்ரி ஆசிரமத்தில் தங்கியுள்ள மூக்குப்பொடி சாமியாரை நேற்று சந்தித்து ஆசிபெற்றார்.

    மேலும் தரையில் கால் மீது கால் போட்டப்படி படுத்திருந்த மூக்குப்பொடி சாமியாரின் அருகில் அமர்ந்து சிறிது நேரம் தியானம் செய்தார். பின்னர் அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.

    விரைவில் 18 எம்.எல்.ஏ.க்களின் தீர்ப்பு வெளிவர உள்ள நிலையில் தனக்கு சாதகமாக தீர்ப்பு வரவேண்டி மூக்குப்பொடி சாமியாரிடம் தினகரன் ஆசிபெற்றிருக்கலாம் என்று கூறப்படுகிறது.

    ×